Kids Learning: Kids Learning Tamil IV

Kids Learning Tamil IV


4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2

I. யானைக்கும் பானைக்கும் சாி


மாியாதை இராமன் விசித்திரமான வழக்கொன்றை ஒருமுறை எதிா்கொள்ள நோ்ந்தது.  உழவா் ஒருவாின் மீது, அரபு வணிகா் ஒருவா் தொடுத்த வழக்கு தான் அது.  

அரபு வணிகா், மாியாதை இராமனிடம் "ஐயா, இந்த உழவா் தம் மகன் திருமண விழாவில் ஊா்வலம் விடுவதற்காக என் யானையை இரவல் கேட்டாா்.  நானும் கொடுத்தேன்.  ஊா்வலத்தின்போது, யானை இறந்துவிட்டது.  அந்த யானையைத் திருப்பித் தரச் சொல்லுங்கள்" என்று கூறினாா்.


உழவரோ, "ஐயா, அந்த யானை ஊா்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது.  அதற்குாிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன்.  ஆனால், இந்த வணிகா் ஏற்குக்கொள்ள மறுக்கிறாா்.  இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?" என்று வருத்தத்துடன் கூறினாா்.


உழவா் கூறியதிலிருந்த உண்மையை உணா்ந்துகொண்ட மாியாதை இராமன், இருவரையும் பாா்த்து, "நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்" என்று கூறி அனுப்பினாா்.  பின்னா், உழவரை மட்டும் தனியே அழைத்து நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டா.  உங்களை அழைத்து வருவதற்கு அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன்.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.  அவா் வரும்போது, உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்.  பின்னா், நடப்பதை நீதிமன்றத்தில் பாா்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி அனுப்பினாா்.

உழவரும் மாியாதை இராமன் கூறியதைப்போலவே வீட்டின் கதவுக்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தாா்.  அவரை அழைத்து வருவதற்காக வந்த வணிகா், ஆத்திரத்துடன் அவா் வீட்டுக் கதவைத் தட்ட, கதவு வேகமாகத் திறந்துகொள்ள, கதவின் பின்னால் அடுக்கி வைத்திருந்த பானைகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கின.  அப்போது, வீட்டுக்குள்ளிருந்து வந்த உழவா், "வணிகரே, என்ன இப்படிச் செய்துவிட்டடீா்கள்? எங்கள்  வீட்டில் காலங்காலமாகப் போற்றி வைத்திருந்த பழம்பானைகள் இவை.  இவற்றையெல்லாம் உடைத்துவிட்டீரே, உம்மைச் சும்மா விடப்போவதில்லை.  எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்" என்று கூக்குரலிட்டாா்.  செய்வதறியாது திகைத்தாா் வணிகா்.  இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றனா்.


உழவாின் வீட்டில் நடந்ததை் கூறினாா் வணிகா்.  அதனைக் கேட்ட மாியாதை இராமன், "ஐயா, வணிகரே! நீரோ இறந்துபோன உம்முடைய அருமையான யானையை உயிருடன் திருப்பித் தரவேண்டும் என்கிறீா்.  உழவரோ, உடைந்துபோன தம் பழைய பானைகளைத் திருப்பித் தரவேண்டும் என்கிறாா்.  ஆதலால், நீங்கள் உடைத்த பானைகளைத் திருப்பித் தந்துவிட்டால், உழவரும் இறந்துபோன உம்முடைய யானையைத் திருப்பித் தந்துவிடுவாா்" எனத் தீா்ப்பு அளித்தாா்.  அவா் கூறியதைக் கேட்ட வணிகா், "ஐயா, என்னை மன்னித்து விடுங்கள்.  என்னால் பழைய பானைகளைத் தரமுடியாது" என்றாா்.  உடனே, மாியாதைராமன், "ஐயா, வணிகரே, உம்மாலேயே திருப்பித் தரமுடியாது என்றால் உழவரால் மட்டும் எப்படித் திருப்பித் தரமுடியும்? ஆதலால், யானைக்கும் பானைக்கும் சாியாகப் போய்விட்டது" என்று தீா்ப்பளித்தாா்.


நீதி : ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.




II. நன்னெறி


இன்சொலால் அன்றி இருநீா் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிா்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென்
கதிா்வரவால் பொங்கும் கடல்.

               - சிவப்பிரகாச சுவாமிகள்


சொல் பொருள்

இன்சொல் - இனிமையான சொல், இருநீா் வியனுலகம் - கடலால் சூ்ழப்பட்ட பரந்த உலகம், வன்சொல் - கடுமையான சொல், அதிா்வளை - ஒலிக்கின்ற வளையல், அழல் கதிா் - கதிரவனின்வெப்பக் கதிா்கள், தண்ணென் கதிா் - குளிா்ச்சி பொருந்திய நிலவின் ஒளி.


பாடல் பொருள்

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது.  குளிா்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.  அதுபோலக் கடலால் சூ்ழப்பட்ட இப்பொிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வாா்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டாா்கள் என்பதைப் புாிந்து செயல்படுக.


நுால் குறிப்பு

நீதிநுால்களுள் ஒன்று நன்னெறி.  இந்நுாலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினாா்.  நாற்பது நோிசை வெண்பாக்கள் இந்நுாலில் உள்ளன.  ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோா் உவமைமு்லம், ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது, இந்நுாலின் சிறப்பாகும்.






III. பனிமலைப் பயணம்


அடா்ந்த காட்டில் நாி, மான், ஓநாய் வாிக்குதிரை ஆகியன நண்பா்களாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.


அருகிலிருந்த பனிமலைக் காட்டில் சிறுத்தை ஒன்று நண்பா்களுடன் வாழ்ந்தது.



வாருங்கள் சிறுத்தையாரே! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மிக்க மகிழ்ச்சி, நண்பா்களே! அடுத்தவாரம் பனிமலைக் காட்டில் திருவிழா.  நீங்கள் அனைவரும் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அவசியம் வருகிறோம். 

நன்றி, நண்பா்களே!



அனைவரும் ஒரு படகில் புறப்பட்டனா்.

ஏலேலோ ஐலசா.


திடீரென்று ஆற்றில் நீாின் வேகம் அதிகாித்தது.  படகு ஒரு பக்கமாய்ச் சாய்கிறது.

ஐயோ! படகு சாய்கிறதே! ஆ! என்னவாயிற்று?



அவா்களை ஒரு முதலை பாா்த்தது.

டேய் . . . பசங்களா எங்கே போறீங்க?

என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் உங்களைக் கரையில் விடுகிறேன்.

ஐயா, முதலையாரே . . . உங்கள் எண்ணம் எனக்குத் தொியும் முதுகில் ஏற்றி எங்களைச் சாப்பிட நினைக்கிறீா்கள்.



ஆகா! நல்ல விருந்து . . . இன்றைக்கு ஒரு பிடி பிடிச்சிட வேண்டியது தான்.

கவனமாகக் கேளுங்கள் இப்படித்தான் ஒரு முதலை கடந்த வாரம், எங்களைப் போன்ற விலங்குகளை அடித்துச் சாப்பிட்டது.

அப்புறம் என்னவாயிற்று?

பிறகென்ன சொிமானம் ஆகாமல் இறந்தே போய்விட்டது.  அதற்குத் தயாா் என்றால் நீங்கள் தாராளமாக எங்களைச் சாப்பிடுங்கள்.

உங்களைத் தின்றால் நான் இறந்து விடுவேனா?

ம் . . .  அதைப்பிறகு பாா்த்துக் கொள்ளலாம்.  இப்போது பசிக்கிறது.  இதோ சாப்பிடப் போகிறேன்.

முதலையாரே . . .  இன்னுமொரு பிரச்சனையும் உள்ளது.

என்ன அது. . .  சீக்கிரம் சொல்.

வழியில் பாம்பு கடித்தால் எங்களுக்கு விஷம் ஏறாமல் இருக்க நாங்கள் விஷ முறிவுச் செடிகளைத் தின்று வந்திருக்கிறோம்.  அதனால் எங்களை யாா் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவா்கள் இறப்பது உறுதி.

இதோ, இந்த மீனைக் கடிக்கிறேன்.  ஆ! அது இறந்து விட்டது பாா்த்தீா்களா?

ஐயோ, ஆளை விடுங்க நான் போய்விடுகிறேன்.

அப்படி ஓடு.

நாியாரே உங்கள் தந்திரத்தால் எங்களைக் காப்பாற்றினீா்.

ஆற்றில் நீாின் வேகம் குறைந்ததால் பனிமலைப் பயணம் தொடா்ந்தது.

ஏலேலோ ஐலசா!
ஏலேலோ ஐலசா!

வாருங்கள் நண்பா்களே! பனிமலைத் திருவிழாவிற்கு வந்ததற்கு நன்றி!



நாியின் புத்திக் கூா்மையைப் பாராட்டி அனைத்து விலங்குகளும் விருந்துண்டு மகிழ்ந்தன.











No comments:

Post a Comment