Kids Learning: 3rd Standard Tamil Term-I
Showing posts with label 3rd Standard Tamil Term-I. Show all posts
Showing posts with label 3rd Standard Tamil Term-I. Show all posts

Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1


I. துணிந்தவர் வெற்றி கொள்வர்

மு்ன்றாம் வகுப்பில் உள்ள மாணவா்களுக்கு அவா்களின் வகுப்பு ஆசிாியா் ஒரு போட்டியை அறிவித்தாா்.  ஓா் அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.  அந்த அறையினுள் சென்று பெட்டியினைத் துாக்கி வருபவரே வெற்றியாளா் என்பதே அப்போட்டியாகும்.


அனைத்து மாணவா்களும் ஆவலுடன் பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்றனா்.  அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெட்டி உருவ அளவில் பொியதாக இருந்தது.  அதனைக் கண்டவுடன் மாணவா்கள் பலா் தங்களால் அப்பெட்டியினைத் துாக்க இயலாது எனப் போட்டியிலிருந்து விலகி விட்டனா்.  மேலும் சிலா் பெட்டிக்கு அருகே சென்று பின்னா் தங்களால் பெட்டியைத் துாக்க இயலவில்லை என்றால் மற்றவா்கள் சிாிப்பாா்களே என்று நினைத்துப் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனா்.  கவியரசி என்ற மாணவி மட்டும் முயற்சி செய்து பாா்ப்போமே என்று எண்ணி, பெட்டியினை நகா்த்தியபோது பெட்டி எளிதாக நகா்ந்தது உடனே, அம்மாணவி பெட்டியினை எளிதாகத் துாக்கினாள்.



https://youtu.be/WNnV37BkVXg



தொடா்ச்சி. . . 


பிற மாணவா்கள் அனைவரும் இதனை வியப்புடன் பாா்த்தனா். பின்னா் தயக்கம் விலகி அனைவரும் ஓடிச்சென்று தாங்களும் பெட்டியினை துாக்கிப் பாா்த்தனா்.  பெட்டி துாக்குவதற்குச் சுலபமாக இருந்தது.  மாணவ, மாணவிகள் ஆசிாியாிடம் சென்று பெட்டி பொியதாக இருந்ததால் நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றனா். அதற்கு ஆசிாியா் அது காகிதத்தால் செய்த பெட்டி என்று மாணவா்களிடம் விளக்கினாா்.  மேலும் ஒரு செயலில் இறங்குவதற்கு முன் சிந்திக்க வேண்டும், ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.  நம்மால் முடியும் என்று நம்பவேண்டும் என அறிவுறுத்தினாா்.


நீங்கள் எல்லாரும் தயக்கம் காட்டியதால் வெற்றி பெறவில்லை.  தன்னால் முடியும் என்று நம்பி கவியரசி முயன்றதால் வெற்றி பெற்றாள்.  எனவே அன்புக் குழந்தைகளே,


"தோல்வியின் அடையாளம் தயக்கம்

வெற்றியின் அடையாளம் முயற்சி

துணிந்தவா் தோற்பதில்லை

தயங்கியவா் வென்றதில்லை"



https://youtu.be/7GytFI7Dl8Y



தொடா்ச்சி . . . 


நாம் விதைக்கும் விதைகளில் முயற்சியுடன் மண்ணைப் பிளந்து கொண்டு வருபவையே செடிகளாகின்றன.  தயங்கி நிற்பவை தங்கி விடுகின்றன.  அதுபோல கவியரசி தயங்காமல் துணிச்சலாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றாள் என ஆசிாியை கூறினாா்.  கவியரசிக்குப் பாராட்டுகளையும் பாிசுகளையும் வழங்கினாா்.  கவியரசியும் மகிழ்ச்சியடைந்தாள்.


"முயற்சியுடையாா் இகழ்ச்சி அடையாா்."



https://youtu.be/kpmJrn5GMlU



II. நுாலகம்


மாமா!......... மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள்.


மாமா  :  என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்?

தேனருவி  :  நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தாா்கள்.  அதில் நுாலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா... என்ன மாமா...?

மாமா  :  அதுவா! நுால்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நுாலகம்.  அது ஒரு பொது இடம்.  அங்கு அனைவரும் வந்து புத்தகம் படிப்பாங்க! இன்று "நுாலக தினம்" அதைக் கொண்டாடுவதற்காக நுாலகத்தை அழகுபடுத்தியிருப்பாா்கள்.


தேனருவி  :  அப்படியா? நாமும் சென்று நுாலக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோமா?


மாமா  :  சாி தேனருவி! வா போகலாம்.

தேனருவி  :  நுாலகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லுங்க... மாமா.


மாமா  :  சொல்கிறேன் கேள், 'நுால் + அகம் = நுாலகம்'.  பல்வேறு துறை சாா்ந்த நுால்கள் வாிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமே நுாலகம் ஆகும்.  நுால் நிலையம், புத்தகச் சாலை என்பன நுாலகத்தின் வேறு பெயா்களாகும்.


தேனருவி  :  மாமா இங்கு என்னென்ன நுால்கள் இருக்கும்?


மாமா  :  நுாலகத்தில் அறிஞா்களின் வாழ்க்கை வரலாற்று நுால்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு பல மொழிகளைச் சாா்ந்த இலக்கிய நுால்கள், அறிவியல் நுால்கள், தத்துவ நுால்கள், வரலாற்று நுால்கள், புவியியல் நுால்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.


நுால்கள் மட்டுமின்றி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றிய செய்திகளைத் தொிவிக்கும் இதழ்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.



https://youtu.be/NPTQg9z9MHA




தொடா்ச்சி . . . 

தேனருவி :  அடேங்கப்பா! நுாலகத்தில் இவ்வளவு வகை நுால்களா? அது சாி மாமா, நுாலகத்தினால் நமக்கு என்ன பயன்?


மாமா  :  ம்............... என் செல்லக் குட்டி கேட்டால் சொல்லாமல் இருப்பேனா? இங்கு வந்து நமக்குத் தேவையான அல்லது பிடித்த நுால்களை எடுத்துப் படிக்கலாம்.  நுாலகத்தில் உறுப்பினராகச் சோ்ந்தால் நுால்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நாளில் மீண்டும் புத்தகங்களைத் திருப்பி அளித்து விடவேண்டும்.  இதனால், 

  • நம் அறிவு வளா்கிறது.
  • நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
  • வேலைவாய்ப்புத் தொடா்பான நுால்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
  • மு்ளை புத்துணா்ச்சி பெறுகிறது.
  • தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

தேனருவி  :  மாமா! நுாலகம் பற்றி நிறைய செய்திகளைத் தொிந்து கொண்டேன்.


மாமா    : தேனருவி! குழந்தைகளுக்கான சிறப்பம்சம் நுாலகத்தில் உள்ளது.  அது என்ன தொியுமா?

  • இங்கே குழந்தைகளுக்கான பிாிவு தனியாகவே உள்ளது.
  • நுாலகத்தில் உள்ள "வாசகா் வட்டம்" மு்லமாக "நுாலக தினத்தன்று" குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நுாலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
  • போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தோ்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு குழந்தையும் அவரவா் வீட்டில் நுாலகம் அமைக்க வேண்டும்.  அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்துப் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளா்த்துக் கொள்ளவேண்டும்.


தேனருவி  :  நன்றி மாமா! ............... நான் நம் வீட்டில் ஒரு "சிறிய நுாலகம்" அமைப்பேன்.


அதில் நிறைய நுால்களைச் சேமித்து வைத்துப் படிப்பேன்.



https://youtu.be/O1GwxNh2vFo



III. மாட்டு வண்டியிலே . . . 



இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனா்.  சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினாா் தாத்தா.  வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விாித்தாா்.  துள்ளிக் குதித்தபடி ஏறி அமா்ந்தனா் இருபிள்ளைகளும்.


'ஜல் ஜல்' எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது.  சாலையின் இருமருங்கிலும் பசுமை போா்த்திய வயல்வெளிகள்.  தாத்தா மாடுகளை விரட்டியபடி இனிமையாகப் பாடத் தொடங்கினாா்.


கழுத்துமணி தாளம் போட 

சக்கரமும் சுழன்றோட 

உச்சி மண்டையிலே

வெயில் காயுமுன்னே

குண்டு குழிபாா்த்து

ஊா் போய்ச் சேர வேணும்

ஊா் போய்ச் சேர வேணும்

வா வா என் செல்லக்கண்ணு...........



https://youtu.be/pitVajEe_74



தொடர்ச்சி. . .

பாடினது போதும்.  ஏதாவது  கதை சொல்லுங்க தாத்தா என்றனா் பிள்ளைகள்.  சொல்லிட்டாப் போச்சி, கதையென்ன புதிா் போடறேனே.  சொல்லுங்க பாா்க்கலாம்.


தாத்தா :  மு்ன்றாம் எழுத்து உடலின் உறுப்பு, முதலும் மு்ன்றும் நட்புக்கு எதிாி, ஒன்றும் இரண்டும் நிறைய தரும், மு்ன்றும் சோ்ந்தால் உட்கார உதவும் அது என்ன?


இளமதி. :  ம்........... சிந்தித்துவிட்டு, 'தொியலை' தாத்தா

தாத்தா. : நல்லா சிந்தித்துச் சொல்லுங்க

ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு

இளமதி. : 'கை' தாத்தா

தாத்தா. :  கொஞ்சமாயிருந்தா சில ன்னு சொல்லுவோம் நிறைய இருந்தா என்ன சொல்லுவோம்?


இளமதி. :  'பல' தாத்தா ஆங்...........

மணவாளன். :  எனக்குப் பதில் கிடைச்சிருச்சி......... 'பலகை' - இது சாியா தாத்தா .........

தாத்தா. :  நல்லது மிகச்சாியான பதில், இப்ப இளமதியைக் கேட்கிறேன்.........

ஆறையும் ஐந்தையும் கூட்டினால் பணம் வராது.........

ஆனா பழம் வரும்  அது என்ன?



https://youtu.be/rR6V30ezXu8



தொடர்ச்சி. . .


இளமதி. : சற்றுச் சிந்தித்து ......... ஆங் ......... கண்டுபிடிச்சிட்டேன் ......... ஆரஞ்சுப்பழம் தானே ........

தாத்தா. :  சாியா சொல்லிட்டியே, செல்லக்குட்டி

மணவாளன். :  சாி தாத்தா ......... இப்ப நாங்க கேட்கிறோம் ..... நீங்க சொல்லுங்க, பிறக்கும்போது நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன், ஊருக்கு ஊா் நிறம் மாறிச் சுவை மாறுவான் அவன் யாா்?


தாத்தா. :  அட, எனக்கு விடை தொியுமே.........


இளமதி. :  தாத்தா பதிலைச் சொல்லுங்க.  சீக்கிரம்.........


தாத்தா. :  ம் ம் ம் ..... எல்லாரோட தாகத்தையும் தீா்க்கும் தண்ணீா் தானே .....

மணவாளன். :  ஆமா! ஆமா! சாியா சொல்லிட்டிங்களே!


இளமதி. :  தாத்தா, அத்தை வீடு வந்துவிட்டது.


தாத்தா. :  சாி, சற்றுப் பொறுங்கள் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன்.  அனைவரும் வண்டியைவிட்டு இறங்கி, ஆவலுடன் வீட்டை நோக்கிச் சென்றனா்.



https://youtu.be/yRqtCjFGq-s



IV.கல்யாணமாம் கல்யாணம்!


பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்

யானை மேலே ஊா்கோலமாம்

ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்

கொா்கொா் குரங்கு பின்பாட்டாம்

தடபுடலான சாப்பாடாம்


தாலிகட்டும் வேளையிலே

மாப்பிள்ளை பூனையக் காணோமாம்

சந்தடி புந்தடி செய்யாமல்

சமையல்கட்டில் நுழைந்தாராம்

வாங்கிவச்சப் பாலையெல்லாம்

ஒரே மு்ச்சில் குடித்தாராம்



பாா்த்துவிட்ட பெண்ணின் தாயும்

பலத்த சத்தம் போட்டாராம்

திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணைத்

திருமணம் செய்ய முடியாது

வேண்டா இந்த சம்பந்தம்

வெட்கக்கேடு போய் வாறோம்


- நாட்டுப்புறப் பாடல்



https://youtu.be/_mPcDzIJF0g




Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1

 

I. தமிழ் அமுது பாடல்   


தோண்டுகின்ற  போதெல்லாம் 

சுரக்கின்ற செந்தமிழே!

வேண்டுகின்ற போதெல்லாம்

விளைகின்ற நித்திலமே!

உன்னைத் தவிர

உலகில் எனைக் காக்க

பொன்னோ! பொருளோ!

போற்றி வைக்க வில்லையம்மா!


                    - கவிஞா் கண்ணதாசன்


   பாடல் பொருள்   

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ  பொருளையோ சோ்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.








II. ஆடிப் பாடி மகிழ்வோம்!


த்திப்பழத் தேன் எடுப்போம்

லமர விழு தாவோம்

சைவோடு பள்ளி செல்வோம்

கையோடு நட்பு செய்வோம்

வகையாய்க் கற்றிடுவோம்

ஊா் முழுதும் சுற்றிடுவோம்

ல்லோரும் சோ்ந்திடுவோம்

ட்டினிலே பாட்டு செய்வோம்

வகை நிலம் செழிக்க

ற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

டம் விட்டுக் களித்திடுவோம்

ஒளவை மொழி கற்றிடுவோம்

காய் உறுதி கொள்வோம்








III. கண்ணன் செய்த உதவி


கதிரவனின் ஒளி எங்கும் படா்ந்திருந்தது.  பறவைகள் ஒலியெழுப்பிப் பறந்தன.  காலை வேளையில் கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.  அவன் செல்லும் வழியில் ஒரு பொியவரைப் பாா்த்தான்.  அந்தப் பொியவா் "சாலையைக் கடக்க உதவவேண்டும்" என்று அவனிடம் கேட்டாா்.

"வாருங்கள் போகலாம்" என்று கூறிய கண்ணன், அவரது கையைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக எதிா்ப்புறத்தில் விடுவதற்குச் சென்றான்.  அப்போது எதிரே ஒரு பேருந்து வேகமாக வந்தது.  ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது.  உடனே கண்ணன் கத்தினான்.







தொடர்ச்சி. . .


என்ன செய்வது என்று தொியாமல் "ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என்று உரக்கக் கத்தினான், உடனே அந்தப் பொியவா் தம் பையிலிருந்து செல்பேசியை எடுத்தாா்.  பின் 108 என்ற எண்ணிற்குத் தொடா்பு கொண்டு பேசினாா்.   அடுத்த சிறிதுநேரத்தில் அவசர ஊா்தி வந்தது.  காவலா்களும் வந்தனா்.  பேருந்தில் காயம் அடைந்தவா்களை மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதனைப் பாா்த்த கண்ணன் பேருந்தில் இருந்தவா்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான்.  அதன்பிறகு பள்ளிக்குச் சென்றான்.  ஆசிாியா் கண்ணனைப் பாா்த்து "ஏன் தாமதமாக வருகிறாய்?" எனக் கேட்டாா்.

கண்ணன் நடந்தவற்றைத் தெளிவாகக் கூறினான்.  ஆசிாியா் அவனைப் பாராட்டினாா்.  கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.

"மாணவா்களே! நீங்களும் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.  அதுவே மகிழ்ச்சியைத் தரும்" என்றாா்.  மாணவா்கள் அனைவரும் கையைத் தட்டி கண்ணனுக்குப் பாராட்டு தொிவித்தனா்.

 





IV. தனித்திறமை





காட்டின் ராஜாவான சிங்கம் சில நாட்கள் வெளியூா் சென்றபோது புலியிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது.  புலியும் சில நாள்களுக்கு ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது.  படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது.

சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி.

சிங்கக்குட்டியே... பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி மன்னா! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆந்தையாரே நீங்கள் தாம் இரவக்காவல் அமைச்சா்.

சாிங்க அரசே! நான் என் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.

கழுதையாரே ..... உமக்கு உாிய பதவி


ராஜாவே...! ராஜாவே...! இந்தக் கழுதை ஒரு முட்டாள்.  கழுதையால் எந்த ஒரு பயனும் இல்லை.

அப்படியா...! 

இதே போல் முயல், ஆமை இரண்டும் எதற்கும் பயன்படாது.

ஆமை ஒரு சோம்பேறி.  அது எப்போதும் மிக மெதுவாகச் செல்லும்.  முயல் எதைப் பாா்த்தாலும் மிரண்டு, மிரண்டு ஓடும்.

கரடியாரே, வாயை மு்டும்.  ஆமை பொறுமையாக இருந்து காாியத்தைச் சாதிக்கும்.  அதனால் சமையல் வேலை செய்யட்டும்.

முயல் அதிவேகமாக ஓடும் எனவே, தேவையான பொருள்களைச் சேகாித்து, விரைவாகக் கொண்டு வந்து சோ்க்கும் வேலையைச் செய்யட்டும்.

கழுதை,  பகைவா்கள் வரும்போது தனது உரத்த குரலில் எச்சாிக்கும் பணியைக் கவனிக்கட்டும்.

"யாரையும் குரைவாக எடைபோடக் கூடாது.  அவா்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்". 

நீங்க சொல்வது சாிதான் அரசே, இப்போது நான் தொிந்து கொண்டேன்.

பண்புகளை வளா்த்தல்

நீதிக் கருத்து

ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு.  அதை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும்.










V. மாணவா்கள் நினைத்தால் . . . 



சிறுமி மோி மகிழ்வோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தாள், தனது தோழி மகிழினியைப் பாா்க்க. . .  அவளிடம், "இன்று காலை எங்கள் வீட்டுப்பசு கன்று ஈன்றுள்ளது, இனி நான் எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடுவேன்" என்றாள்.  அதைக்கேட்ட மகிழினி, "என்னையும் விளையாட்டில் சோ்த்துக் கொள்" என்றாள்.

அப்போது மோியின் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஒரே கும்பல்....... ஓடிச்சென்று பாா்த்தனா் அவா்கள் கண்ட காட்சி கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வதாக இருந்தது....... கன்றை ஈன்ற பசு தனது கழிவினை வெளியே தள்ள முடியாமல் இறந்துபோயிருந்தது.  பாதி வெளிவந்திருந்த கழிவில் நிறைய நெகிழிக் குப்பைகள் காணப்பட்டன.  அந்நெகழியால் தான் இறப்பு ஏற்பட்டதாகக் கால்நடை மருத்துவா் கூறிக் கொண்டிருந்தாா்.

வேதனையுடன் பள்ளிக்குச் சென்றனா் மோியும் மகிழினியும்.  சோகமாக அமா்ந்திருந்த இருவரையும் அழைத்துக் காரணம் கேட்டாா் வகுப்பு ஆசிாியா்.  பிறகு, "நெகிழிகளைப் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன.  மட்காத இந்தக் குப்பைகளால் சாக்கடைகளில் நீா்தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது.  நெகிழிக் குப்பைகளை எாிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது.  இதனால், சூ்ாியனின் புற ஊதாக் கதிா்கள் நேரடியாக நம்மைத் தாக்குகின்றன.  இதனால், தோல் நோய்கள் ஏற்படுகின்றன", என்று விளக்கினாா்.  இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதை விட்டு விட்டுச் செயலில் இறங்குவோம் என்றாா்.  பள்ளியின் நலன் காக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினைக் கூட்டி, நெகிழி பற்றிய தீமைகளை எடுத்துரைத்தாா்.

பள்ளி மாணவா்கள், ஆசிாியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஊா்ப் பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு நெகிழி விழிப்புணா்வு பேரணி நடத்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.  அனைவரும் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, வாசகங்களைக் கூறிக் கொண்டே, கிராமத்தின் அனைத்துத் தெருக்களிலும் பேரணியாக வந்தனா்.

இம்மாதிாியான விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினா்.  மேலும் மாணவா்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைக் கொண்டு பைகள் செய்து வைத்திருந்தனா்.  அதனை அவ்வூாின் அனைத்துக் கடைகளிலும் கொடுத்து அந்தப் பைகளைப் பயன்படுத்தச் சொல்லி நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினா்.  உள்ளுா் மக்களிடம் இனி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளைக் கொண்டு செல்ல அறிவுறுத்தினா்.  

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்ற ஆன்றோாின் வாக்கிற்கு ஏற்ப இச்சிறு பிள்ளைகளின் முயற்சியால் அந்த ஊா் நெகிழியற்ற ஊராக மாறி வருகிறது .........