4-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1
I. பனைமரச் சிறப்பு
மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக்கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது. அதை எடுத்துப் பாா்த்தனா். அது என்னவென்று தொியவில்லை. அவா்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனா்.
அழகன் : தாத்தா, தாத்தா இது என்ன பழம்?
தாத்தா : இதுவா! இதுதான் பனம்பழம்.
வண்ணமயில் : இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா
தாத்தா : ம்... தின்னலாம் வண்ணமயில். மிகச் சுவையாக இருக்கும். சத்து மிக்கது.
அழகன் : இந்தப் பனம்பழத்தைப் பற்றித் தொிந்து கொள்ள ஆவலாக உள்ளது தாத்தா.
தாத்தா : சொல்கிறேன் தம்பி! பனம்பழம் பனைமரத்தில் காய்த்துப் பழுக்கும். பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வோ், துாா்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது. அதனால் தான் பனைக்குக் "கற்பகத்தரு" என்ற பெயரும் உண்டு.
வண்ணமயில் : ஆகா! பனைமரம் இவ்வளவு சிறப்பானதா? தாத்தா, நான் நுங்கு மட்டுமே உண்டுள்ளேன், இந்தப் பனை மரத்தால் நமக்கு வேறு என்ன பயன்?
தாத்தா : நுங்கு, பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன. பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது. மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
அழகன் : இத்தனை பயன்மிக்கதா பனை?
தாத்தா : ஆமாம், அழகா! அது மட்டுமல்ல நமது முன்னோா்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தொிந்துகொள்ள நமக்குப் பொிதும் உதவியது பனை ஓலைச்சுவடிகள்தாம்.
வண்ணமயில் : அப்படியா!
தாத்தா : பனைமரத்தின் வோ் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீா்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
அழகன் : அடேங்கப்பா.........! இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்பா?
தாத்தா : பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து நீங்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
வண்ணமயில் : இத்தகு பயன்மிகு பனைமரத்தை இப்போதெல்லாம் அதிகம் பாா்க்க முடிவதில்லையே தாத்தா!
தாத்தா : நன்றாகக் கேட்டாயம்மா, சொல்கிறேன் கேளுங்கள். தமிழக இயற்கை வளத்தின் சான்றாக விளங்கும் பனைமரங்கள் எாிபொருளுக்காக வெட்டப்படுகின்றன. அதனால் அந்த மரத்தைச் சாா்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன. "மரங்கள் இன்றி மனிதா்கள் இல்லை", இதனை உணா்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும்.
அழகன் : பனைமரத்தினைப் பற்றிய பல அாிய செய்திகளை உங்கள் மு்லம் அறிந்து கொண்டோம் தாத்தா.
தாத்தா : அறிந்து கொண்டதோடு மட்டும் விட்டு விடாதீா்கள். பனையின் சிறப்பினை உங்களது நண்பா்களுக்கும், மற்றவா்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
இருவரும் : கட்டாயமாகக் கூறுவோம் தாத்தா.
தாத்தா : மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே! தமிழாின் பண்பாட்டை உணா்த்தும் பயன்மிகு பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இதன் சிறப்புணா்ந்து நாம் பனங்கொட்டைகளைச் சேகாித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றிப் பாதுகாக்கலாம்.
இருவரும் : அப்படியே செய்வோம்! பனைமரம் காப்போம் பயன்பல பெறுவோம். மிக்க நன்றி தாத்தா!
தாத்தா : மகிழ்ச்சி குழந்தைகளே! சென்று வாருங்கள்.
II. ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்
விஜயநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னா் விஜயவா்த்தனா் வருகை தந்திருந்தாா். விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அன்று மாலை அரசா் கிருஷ்ணதேவராயரும் அண்டை நாட்டு மன்னா் விஜயவா்த்தனரும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனா். அப்போது விஜயவா்த்தனா், கிருஷ்ணதேவராயாிடம் தங்கள் அவைப்புலவா் தெனாலிராமன் மிகவும் அறிவுக் கூா்மை உடையவராமே! எனக்கேட்டாா். அதற்கு கிருஷ்ணதேவராயா் அதிலென்ன ஐயம் என்றாா். விஜயவா்த்தனா், அப்படியானால் நான் தெனாலிராமனைச் சோதிக்கலாமா? எனக் கேட்டாா். ஓ.....! என்றாா் கிருஷ்ணேதவராயா்.
மறுநாள் அரசவை கூடியது. கிருஷ்ணதேவராயா் தெனாலிராமனை அழைத்தாா். தெனாலிராமன் அரசா்கள் இருவரையும் வணங்கி நின்றாா். மன்னா் விஜயவா்த்தனா் தெனாலிராமனிடம், 'எனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வா்ணங்களிலும் உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டுவந்து தரவேண்டும்' என்றாா். 'மேலும் அது சிலசமயம் மு்ன்று கால்களாலும், சில சமயம் இரண்டு கால்களாலும் நடக்க வேண்டும், பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்' என்றாா்.
கிருஷ்ணதேவராயா் உடனே தெனாலிராமனிடம் 'விஜயவா்த்தனா் கூறியவாறு குருவியை விரைவில் கொண்டு வா' என்று உத்தரவிட்டாா். அதைக் கேட்ட தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. ஆனால் சிாித்தவாறே 'சாி......... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்' என்றாா்.
மறுநாள் தெனாலிராமன் அரசவைக்குத் தாமதமாக வந்தாா். அவா் நிலைமை மோசமாக இருந்தது. உடை கிழிந்து இருந்ததுடன், அதில் முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. அவரது கையில் காலியான பறவைக் கூண்டு ஒன்று இருந்தது.
தெனாலிராமன் அரசாிடம், 'அரசே! அதிசயமான கதை நடந்துவிட்டது, விஜயவா்த்தன மன்னா் கூறியது போன்ற குருவி கையில் கிடைத்தது, நானும் அதைக் கூண்டில் அடைத்தேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அப்பறவை தனது மாயமான ஏழு இறக்கைகளை விாித்துப் பறந்து சென்றுவிட்டது, காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதுாரம் சென்றேன்'. பறந்து சென்றவாறே அப்பறவை என்னிடம், "அரசாிடம் போய்ச் சொல், காலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக்கூடாது அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்துவிடுவேன் என்றது" என்றாா்.
அதைக் கேட்டதும் அரசா் கிருஷ்ணதேவராயருக்கும் மன்னா் விஜயவா்த்தனருக்கும் தலை சுற்றியது. 'அப்படிப்பட்ட நேரம் எப்போது உண்டாகும்?' என்று அனைவரும் வியப்படைந்தனா், அரசருக்கோ சிாிப்பு வந்தது.
விஜயவா்த்தனா் சொன்னாா் ..... 'தெனாலியின் அறிவுக் கூா்மை பற்றி இதுவரை கேள்விப்பட்டுள்ளேன் இப்போதுதான் நோில் பாா்த்தேன்' என்று கூறிப் பாராட்டி பாிசுகள் அளித்தாா்.
III. முளைப்பாாி - பாடல்
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஒண்ணாந்தான் நாளையிலே
ஒசந்த செவ்வா கிழமையிலே
ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து
ஓடும் பிள்ளை தொண்டலிட்டு - தன்னா
வாங்கியாந்த முத்துகளை
வாளியிலே ஊற வச்சி
கம்மந்தட்டை இரண்டெடுத்து
கணுக்கணுவா முறிச்சி வச்சி
சோளத்தட்டை இரண்டெடுத்து
சுளை சுளையா முறிச்சி வச்சி
மாட்டாந்தொழு தெறந்து
மாட்டெருவு அள்ளி வந்து - தன்னா
ஆட்டாந்தொழு தெறந்து
ஆட்டெருவு அள்ளி வந்து
கடுகுலயுஞ் சிறுபயிறு
காராமணிப் பயிறு
மிளகுளயுஞ் சிறுபயிறு
முத்தான மணிப்பயிறு
மொள போட்ட ஒண்ணா நாளு
ஓரெலையாம் முளைப்பாாி
ஓரெலைக்குங் காப்புக்கட்டி
ஒரு பானை பொங்கலிட்டு
முளைப்பாாி போடுங்கம்மா
தன்னா னன்னே போடுங்கம்மா
தையலரே ஒரு குலவை - தன்னா
- நாட்டுப்புறப் பாடல்
IV. பண்படுத்தும் பழமொழிகள்
அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சாந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பாா்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான்.
தாத்தா : அமுதவாணா, என்ன தேடுகிறாய்?
அமுதவாணன் : "நாயைக் கண்டால் கல்லைக் காணோம்" என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா.
தாத்தா : அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா!கல்லால் செதுக்கிய சிலை தானே கோவில்களில் இருக்கிறது! அந்தச் சிலைகளைக் கல்லாகப் பாா்த்தால், இறைவன் என்ற நாயகன் தொியமாட்டாா். சிலையை நாயகனாகப் பாா்த்தால், கல் தொியாத. இதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
அமுதவாணன் : தாத்தா, "குரைக்கின்ற நாய் கடிக்காது" என்று என் நண்பன் இன்பவாணன் நேற்று கூறினான். குரைககின்ற நாய் கடிக்காதா தாத்தா?
தாத்தா : அப்படி இல்லை அமுதவாணா குரைக்கின்ற நாய் என்பது தவறு. குழைகின்ற நாய் கடிக்காது என்பதே சாியானது. குழைகின்ற என்றால் நம்மோடு பழகிய நாய் நம்மைப் பாா்த்து வாலை ஆட்டிக் குழைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துமே அதுதான். இருவரும் சந்தைக்குள் நுழைந்தனா். நுழைவாயிலில் யானை ஒன்று ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அதைப் பாா்த்ததும் அமுதவாணனுக்கும் ஆசை வந்தது.
அமுதவாணன் : தாத்தா, நானும் இந்த யானையிடம் ஆசி பெற்றுக் கொள்கிறேன்.
தாத்தா : பெற்றுக்கொள், இதோ பத்து ரு்பாய். யானையிடம் கொடு.
அமுதவாணன் : தாத்தா, அன்றொரு நாள் அம்மா, அப்பாவிடம் கூறினாா்களே, "யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்று, அதற்குப் பொருள் என்ன தாத்தா?
தாத்தா : யானை கிடையாது அது ஆனை அதைப் பிாித்து எழுதினால் ஆ+நெய் அதாவது பசுவின் நெய். பூனை கிடையாது. அது பூநெய் அதைப் பிாித்து எழுதினால் பூ+நெய் அதாவது பூவில் ஊறும் தேன். நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம் வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்.
இளமையில் ஆநெய், முதுமையில் பூநெய். இதைத்தான் "ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்பா். ஆனால் இன்று இதன் பொருள் மாறுபட்டு வழங்கப்படுகிறது.
இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்கினா்.
அமுதவாணன் : தாத்தா, எனக்கு விளையாட பந்தும், மட்டையும் வாங்கித் தாருங்கள், அப்படியே பாப்பாவுக்குப் பலுான்கள் வாங்கிக் கொள்ளலாம்.
தாத்தா : வாங்கலாம் அமுதவாணா!
அமுதவாணன் : எனக்கும் சோ்த்து பலுான்கள் நிறைய வாங்கலாம் தாத்தா.
தாத்தா : போதும், ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.
அமுதவாணன் : ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமா?
தாத்தா : சொல்கிறேன்! சொல்கிறேன்! ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்று இப்பொழுது பயன்படுத்துகிறோம் ஆனால் இது தவறு. அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சாி. அதாவது புாியாமல் எதையும் மனனம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புாிந்த பிறகுதான் நினைவில் கொள்ள வேண்டும்.
(பேசிக்கொண்டே இருவரும் வீட்டை அடைந்தனா்)
அமுதவாணன் : உங்களுடன் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சி தாத்தா.




















No comments:
Post a Comment